Moving Image

Wednesday, January 13, 2016

பாதயாத்திரைக் குழுவினர் பஜனைப் பாடல்கள்

                                                             ஓம்

            தம்பிரான் தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான்

ஆறுமுகத்தம்பிரான் திருத்தங்கல் - திருச்செந்தூர் பாதயாத்திரைக் குழுவினர் வழிநெடுக தம்பிரானது புகழ்பாடி  செல்லும் இனிய பஜனைப் பாடல்களுள் ஒன்று.

தம்பிரான் தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான்
தம்பிரான் தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான்

அன்பர்களைக் காத்திடுவார் ஆறுமுகத்தம்பிரான்
துன்பங்களைப் போக்கிடுவார் ஆறுமுகத்தம்பிரான்

எளியார்க்கு அருள்புரிவார் ஆறுமுகத்தம்பிரான்
ஏழ்மைதனை அகற்றிடுவார் ஆறுமுகத்தம்பிரான்

கடும் விரத தவமேற்பார் ஆறுமுகத்தம்பிரான்
காவடிதான் தூக்கிச் சென்றார் ஆறுமுகத்தம்பிரான்

சோதனைகள் பலகடந்தார் ஆறுமுகத்தம்பிரான்
சோர்வில்லாமல் பழனிசெல்வார் ஆறுமுகத்தம்பிரான்

கந்தவடிவேலனைக் கண்டுகொண்டார் தம்பிரான்
கந்தன் தந்த பொருளைக் கொண்டுவந்தார் தம்பிரான்

தங்கல்மலை மீதினிலே ஆலயமேகட்டினார்
பழனிமலை ஆண்டவரும் அம்சமாகக் குடிகொண்டார்

நாடிவரும் பக்தருக்கு ஓடிவந்து அருள்புரிவார்
காவடிதூக்கும் அன்பருக்கு கோடிவரம் தந்திடுவார்

யாத்திரையில் துணைவந்தார் ஆறுமுகத்தம்பிரான்
யாத்திரைக்குப் பலன் தருவார் ஆறுமுகத்தம்பிரான்.

No comments:

Post a Comment