Moving Image

Friday, August 30, 2019

முருகப்பெருமான் தலைமையேற்கும் வாழ்வியல் நூல் வெளியீட்டு விழா


அகத்தீசனடி போற்றி!!

பேராற்றல்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பாண்டிச்சேரி ஞானாலயத்தில் வருகின்ற 8.9.2019 அன்று  இவ்வருடத்தின் கடைசி ஆறுமுகனார் தீட்சை வழங்கப்பட உள்ளது. எட்டாவது வட்ட மலர்களுக்கான முதல் கட்ட தீட்சையாக இது இருக்கும். அதற்கு 
அடுத்து வரும் முழுநிலவு நாளான வெள்ளிக்கிழமை 13.9.2019  அன்று மாலை  5.30 மணியிலிருந்து 8 மணி வரை  முருகப்பெருமானே நேரடியாக தலைமை ஏற்று  கலியுக மக்கள் வாழ்க்கை முறை எவ்வாறெல்லாம் இருக்கவேண்டும் என கூறும் வாழ்வியல் என்னும் நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் (The Science and Purpose of Life) வெளிவரவுள்ளது.
அன்று மிக உன்னத தெய்வீக நிகழ்வுகள் நடக்க உள்ளது. அனைவரும் தவறாது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உன்னத அனுபவங்கள் பெற்றிடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.