Moving Image

Friday, May 17, 2019

ஆதவ/சூரிய தரிசன உன்னத அனுபவங்கள்

ஆதவ/சூரிய தரிசன உன்னத அனுபவங்கள்

கடந்த 2018 நவம்பர் மாதத்தில் ஆதவ வழிபாடு குறித்து முருகப்பெருமான் அரசாட்சி புரியும் பாண்டிச்சேரி ஞானாலயத்தின் யூடியூப் காணொலி மூலம் அறிந்து இறையருளால் உடனே செயல்படுத்த ஆரம்பித்தேன்.

2018 கார்த்திகை மாதத்தில் தொடங்கிய ஆதவ வழிபாடு பல தெளிவுகளையும் அகவாழ்வு இகவாழ்வு ஏற்றங்களையும் தந்து கொண்டு உள்ளது.

ஈசனை விரைந்து அடையவும் ஒளியுடல் பெறவும், அகக்கண் திறந்து சிறந்த மாமனிதராய் வாழவும் சூரிய தரிசனமே மிகச் சிறந்த வழி.

ஞானாலய புத்தகமான பாரத்வாஜ மகரிஷிகள் அருளிய ஆகம வேதமும் வால்மீகி மற்றும் அகத்திய மகரிஷிகளின் கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதமும்



ஆதவ தரிசனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த அவரைப் பார்க்கும் நேரம் ஒவ்வொரு நாளும் அதிகரித்தது.

செந்நிறக்கதிரோன் உதித்த நேரம் அவரைக் கண்டு நீர் எடுத்து "எனக்கு பரிபூரண ஞானத்தை தந்தருளுங்கள்" என உள் உருக ஒன்றி வேண்டி நீரினை நிலம் விடுத்து ஆதவ மையத்தினை தரிசிக்க ஆரம்பித்தல் வேண்டும்.
முதல் நாள் ஈச அலைகள் அதிகம் வரும் முதல் 24 நிமிட   நேரத்தில் ஆதவக் கதிர் அளிக்கும் உள் முக ஏற்றங்களை உணர ஆரம்பித்தேன்.
அடுத்தடுத்த  நாள் அந்தி சந்தியில் நிமிடங்களை அதிகப்படுத்த பல அற்புதங்கள் உள் நிகழ ஆரம்பித்தது. இது 1.20 மணி நேரம் வரை சென்றது, அதற்கு மேல் பார்த்தால் வெப்ப ஆற்றலே உள் புகும்.

ஆதார சக்கரங்கள் ஒளிவெள்ளத்தால் நிரம்பி பரவுவதையும் உடல் நிலை சீரடைவதையும் கண்கள் பலமாவதையும் உணரலாம். ஒவ்வொரு செயலிலும் அகப்பார்வை மிகுந்து செயல்படுவதை உணரலாம். மேலும்  பல தெளிவுகள் பொதுவில் குறித்திட இயலாது.  உணர்ந்து அனைவரும் சீரடைந்திட வேண்டும்.

மேலும் ஆதவ ஒளி நேர்மறை உணவு (நேர்மறையை எதிர்மறையாக்கி அணுக்களுக்கு உணவாக்கும் ஆத்மா)  என்றால் முழு நிலவு என்பது ஆதவனுக்கு சமம். நேரடி உணவாகும் அணுக்களுக்கு. சிரசு உச்சி நஞ்சகன்று மெலிதாக இருக்கும் அன்று இந்நேரடி எதிர்மின்காந்த அலைகளைப் பெற முடியும்.  க. காவியம் அ-111.
எனவே முழுநிலவு ஒளியையும் 1-3 மணி நேரம் தரிசிக்க  தேகத்தில் மேற்குறிப்பிட்ட நிலைகள் விரைந்து ஏற்பட்டன.
மேலும் ஆழ்ந்த தெளிவு பெறவும் சிரசின் நிலை, அணுக்களின் நுண்நிலைகள் குறித்து அறியவும் மேற்குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கி பயனடையுங்கள். http://enlightenedbeings.org/books.php

ஆதவ வழிபாடு குறித்து சித்தர்கள் அருளிய செய்திகளை சகோதரி ஜெயந்தி ரவி அவர்கள்:


வருகின்ற ஜுன் மாதம் 9ம் தேதி ஆறுமுகனார் தீட்சை நடக்க உள்ளது. தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெற்று பின் பயிற்சியை ஒன்றி செய்ய அடுத்து வரும் ஐப்பசி பௌர்ணமியில் ஆறுமுகனார் தேர்ந்தெடுக்க ஆத்ம விடுதலை அடைந்து பிறவியில்லா பெறும்பேறு அடையலாம். தீட்சையில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்.