Moving Image

Tuesday, August 31, 2021

ஆறுமுகத்தம்பிரானின் குருவார பூசை

 ஆவணி 10, வியாழக்கிழமை  26-9-21 அன்று, தம்பிரான் வாழ்ந்த திருத்தங்கல் நடுத்தெரு காவடிக்கூடத்தில்.. 




ஐயனின் பிரமிட் ஜீவசமாதியில்
பரவும் அற்புத அருளலைகள்










Tuesday, June 22, 2021

கந்தர் அநுபூதி விளக்கம்




கந்தர் அநுபூதி விளக்கம்


கந்தர் அ நுபூதி பாடல் வரிகள் மற்றும் இனிய ஒலி வடிவத்தில் கேட்க இங்கே அழுத்தவும்!


காப்பு

"சரணம்" என்று தம்மை வந்தடைந்தவர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகக் கடவுளின் அணிகலனாகக் கல்போன்ற நெஞ்சமும் இளகி உருகுமாறு செம்மையான இலக்கியத் தமிழ்ச் சொற்களால் தொடுக்கப் பெற்ற கந்தர் அநுபூதி என்னும் கவிமாலையானது சிறப்பாக அமையும் பொருட்டு ஐந்து கரங்களையுடைய திருவிநாயகப்பெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்குகின்றேன்"

1."ஆடிவரும் குதிரையைப் போன்ற மயில் வாகனமே! வேலாயுதமே! அழகான சேவலே!" என்று துதி செய்து திருப்பாடல்களைப் பாடுவதையே அடியேனின் வாழ்நாட் பணியாக இருக்கும் படி அருள்புரிவீராக! "கஜமுகாசுரன்" எனப்படும் ஓர் அசுரன் பெரியதொரு யானையின் முகத்தையுடையவனாகத் தோன்றி விண்ணோர்களைப் பகைவர்களாகக் கருதி அவர்களைத் தேடிச்சென்ற போது, போர்க்களத்தில் அவனைக் கொன்றழித்த திருவிநாயகப்பெருமானின் சகோதரனாகிய கந்தப்பெருமானே!.

2.திருமுருகப்பெருமானே! விண்ணோர்களின் மன்னரே! உள்ளக் களிப்பும் கலக்கமின்மையும் அற்று, பல்வகை யோக மார்க்க வழிகள் சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியைத் தருபவர் தேவரீர் ஒருவரே அன்றோ! எல்லா விதமான பந்தங்களும், "யான்", "எனது" எனப்படும் ஆணவ மலங்கள் அழிந்து தொலைவதற்குரிய மேலான ஆன்மிக உபதேசங்களை அடியேனுக்கு உபதேசித்தருள்வீராக!

3.ஆறுமுகக் கடவுளே! "பரம்பொருள்" என்பது யாது? ஆகாயமோ? நீரோ? பூமியோ? நெருப்போ? காற்றோ? ஞானத்தினால் அறியக்கூடிய பொருளோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களோ? "நான்" என்று சொல்லப்படுகின்ற சீவனோ? மனமோ? "நீயே நான் - நானே நீ" என்று கூறி அடியேனை ஆட்கொண்டது தேவரீரோ?.

4.வளையல் அணிந்த கைகளையுடைய மனைவியொடு மக்கள் என்று சொல்லப்படும் குடும்பப் பந்தத்தில் அகப்பட்டு அடியேன் அழிந்து போவது நியாயமாகுமோ? அசுரர்களாகிய தன் சுற்றத்தினர் சூழ போரிடுவதற்கு எழுந்த சூரபன்மனின் மார்பையும் அவன் தன் சுற்றத்தினருடன் ஒளிந்திருந்த கிரவுஞ்ச மலையையும் தொளைத்துக்கொண்டு ஊடுருவிச் செல்லும்படியாக விடுவித்த வேலாயுதத்தையுடைய கந்தப்பெருமானே!.

5.இவ்வுலக வாழ்க்கையைச் சார்ந்த பொய்யான காட்சிகளாலும் நம்பிக்கைகளாலுமான பெரிய மாயையை நீக்க வல்ல கடவுளான திருமுருகப்பெருமான் தன் ஆறு திருமுகங்களாலும் பல வழிகளில் உபதேசித்து அருளிய தத்துவங்களை, அந்தோ, மீண்டும் நினைவு கூர்ந்து] சொல்லாமற் போய்விட்டேனே! "வீடு, துணிமணி, மாதர்கள்" ஆகியவற்றால் இறுதியில் பெரும் வருத்தத்தைத் தரும் பொய்யான இவ்வுலக மாயையில் அகப்பட்டுக் கொண்டு அதை உண்மை என்று நம்பி அடியேன் இன்னும் தயங்கிக் கொண்டிருக்கின்றேனே!.

6.அடியேனின் கடினமான கல்போன்ற மனத்தின் மீது தேவரீரின் திருவடிகளாகிய அழகு நிறைந்த தாமரைப் பூக்கள் மலரக்கூடுமோ? வள்ளியம்மையாரின் திருவடிகள் மீது குறையாத மிக்க காதல் கொண்ட கருணாகரனே! அடியேன் செய்ய வேண்டிய பணிகள் எவை என்று கூறுவீரோ?
.
7.அழிந்துபோகின்ற மனமே! நீ முக்திபெறும் வழியைக் கூறுகின்றேன், கேட்பாயாக! உன்னிடம் உள்ளதை மறைக்காமல் பிறருக்குத் தானமாகக் கொடுப்பாயாக! கூர்மையான வேலினைத் தாங்கிய இறைவன் திருமுருகப்பெருமானின் திருவடிகளை நினைந்து தியானம் செய்துவருவாயாக! நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பமாகிய வேதனையைத் தூளாக்கும் பொருட்டு அந்தத் துன்பத்தின் காரணமாகிய பற்றினைச் சுட்டெரிப்பாயாக! வினைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருப்பாயாக?.

8.குமாரப்பெருமானே! அடியேன் விரும்பி வாழும் ஊர், மனைவி மக்கள் முதலிய உறவினர்கள், "நான்" என்று சொல்லப்படுகின்ற ஆன்மா ஆகியவை பற்றிய அடியேனின் மயக்கம் கெடுமாறு உண்மைப் பொருளைப் போதித்தவரே! என்றென்றும் குமரனாகவும் இமய மலையரசனின் குமாரி பார்வதி தேவியின் மைந்தனாகவும் இருந்துகொண்டு, போர்க்களத்தில் போரிடும் சூரபன்மன் முதலிய அசுரர்களை அழித்த பெருமானே!..

9.தேன்சொரியும் நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடைய பெண்களின் மோகவலையில் சிக்கிக் கொண்டு உள்ளம் தடுமாற்றம் அடையும் துன்பத்திலிருந்து அடியேன் எப்போது நீங்குவேன்? தடைகள் எதுவுமின்றி கிரவுஞ்ச மலையை ஊடுருவிச் செல்லும்படி வேற்படையை எறிந்த வலிமையுடையவரும், துன்பமும் பயமும் அற்றவருமான திருமுருகப்பெருமானே!.

10.கரிய எருமைக்கடாவின் மீது அடியேனின் உயிரைக் கவர்ந்து செல்லவேண்டி யமன் வரும்பொழுது அழகிய தோகைகளையுடைய மயிலின் மீது ஏறி அடியேன் முன்வந்து காப்பாற்றியருள்வீராக! மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மார்பினையுடையவரே! "வலாரி" எனப்படும் இந்திரனின் விண்ணுலகத்திற்குப் விரோதியாகிய சூரபன்மன் ஒளிந்திருந்த மாமரம் அழிந்து போகுமாறு வேலாயுதத்தை வீசிய திருமுருகப்பெருமானே!
.
11."கூகா" என கூச்சலிட்டு அடியேனின் சுற்றத்தார் ஒன்று கூடி அழ அடியேன் இறந்து போகா வண்ணம் உண்மையான ஞானப்பொருளை எனக்கு உபதேசித்த பரம்பொருளே! "நாகாசலம்" எனப்படும் திருச்செங்கோட்டு மலை மீது வதியும் வேலாயுதனே! "ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்' என்னும் நான்கு வகையான கவிகளைப் பாடும் திறத்தை தேவரீரின் அடியார்களுக்கு வழங்கியருளும் பெருமாளே! வானுலகத்து சிரோ ரத்தினமே!

12.செவ்விய மான் ஈன்ற மகளாம் வள்ளி அம்மையாரைக் களவிற் கொண்டு சென்ற கள்வனாகிய பிறப்பும் இறப்பு இல்லாத திருமுருகப்பெருமான், "பேசாத மவுன நிலையில் சும்மா இருப்பாயாக" என்று அடியேனுக்கு உபதேசித்தவுடனே இவ்வுலகப் பொருள் எல்லாம் மறைந்து போனது வியப்பாகவுள்ளது.

13.ஒப்பற்ற வேலாயுதத்தை ஏந்திய திருமுருகப்பெருமான் நமது குரு என்று, அப்பெருமானின் திருவருளால் அறியாதவர் அப்பெருமானின் திருவருளை அறியும் தன்மையுடையவரோ? மெய்ப்பொருளாகிய திருமுருகப்பெருமான், உருவமுடையவரும் அல்லர், உருமற்றவரும் அல்லர், உள்ளதோர் பொருளும் அல்லர், இல்லாத பொருளும் அல்லர், இருள் சூழ்ந்த பொருளும் அல்லர், ஒளி பொருந்திய பொருளும் அல்லர்.

14.மனமே! ஒளிபொருந்திய வேலாயுதத்தை ஏந்திய திருமுருகப்பெருமானின் வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகளை அடைந்து முக்தியைப் பெறுவாயாக! உடல், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்பொறிகள் வழியாக உண்டாகும் ஆசைகளை உறுதியாக விட்டு விடுவாயாக1.

15.முருகா, குமரா, குகா!" என்று மனம் உருகி அழைக்கும் செயலொழுக்கத்தையும் ஞானத்தையும் எப்போது அருள்வீர்? என்று பக்தியுடன் பொருந்தி நிற்கும் வானோரும் இப்பூவுலகத்தினரும் துதித்துப் போற்றும் "தன் வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, பற்றின்மை, பேரருள், எல்லாம் வன்மை, வரம்பிலா இன்பம்" என்னும் எட்டு வகையான தெய்வீகக் குணங்களாலாகிய பஞ்சரத்தில் வதியும் மகா குருவாகிய திருமுருகப்பெருமானே!.

16.பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, "நல்லது, கெட்டது" எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற்கொண்டு அடியேன் இவ்வாறு அலைந்து திரிவது தகுமோ? தெய்வீக வீரரே! பழங்காலத்து அசுரன் சூரபன்மன் இறந்தொழியும் படி வேலாயுதத்தைச் செலுத்திய சூரரே! தேவருலகைக் காப்பாற்றியவரே.

17.கற்று அறியும் கல்வியும் பெற்றுள்ள அறிவும் வேலாயுதப் பெருமானே நமக்கு அருளியுள்ள காரணத்தால், உலகத்தோரே! இந்நிலவுலகில் உள்ள அளவு ஆசையால் விளையும் மயக்கத்தை நீக்கி, அறச்செயல்களையும் உண்மையையும் கடைப்பிடித்து அறநெறியில் சென்று சேர்வீர்களாக, மேலும் திருமுருகப்பெருமான் அருட்கொடையாக அளித்த நாவைக் கொண்டு அப்பரம்பொருளின் புகழை ஓதிக்கொண்டிருப்பீர்களாக!.

18.சிவபெருமானின் மைந்தரே! பிறவாமலும், இறவாமலும், உணராமலும், மறவாமலும், பிரமனும் திருமாலும் அறியாமலும் விளங்குபவரே! யாவரினும் மேம்பட்டவரே! பாவமற்றவரே! புகலிடம் அளிக்கும் மூர்த்தியே! வானுலகைக் காத்தருளும் பெருமானே! சூரபன்மனுக்கு அச்சம் தருபவரே!.

19.கூரிய வேலாயுதத்தை ஏந்தியவாறு பிரபஞ்சத்தை ஆளும் ஆதியும் அந்தமும் இல்லாத மாமன்னரே! "வறுமை" என்னும் ஒரு பாவி தோன்றியவுடனே அழகும் செல்வமும் நல்ல மனமும் குணமும் குடும்பத்தின் பெருமையும் குலத்தின் பெருமையும் ஒருவரை விட்டுப் போய்விடுகின்றனவே.!

20.கிடைத்தற்கு அரிய உண்மைப் பொருளைப் பெறுதற்கு அடியேன் தகுதியுள்ளவனாகக் கருதித் தேவரீர் அடியேனுக்கு உபதேசத்தைப் போதித்த முறை வியக்கத் தக்கதே! மிகவும் உறுதியானதும் நிலையானதுமான வலிமையுடைய பிரணவப் பொருளாக வானோர் விரும்பித் தியானிக்கும் செவ்வேளே! வானோர் உலகைத் தாங்குபவரே!.

21நினைவும் மறதியும் அற்ற ஆன்மிக நிலையைக் கண்டுகொள்ள அடியேனுக்குத் தேவரீரின் தாமரை மலர்களையொத்த இரு திருவடிகளை அருள்வதற்கென்று மனம் இரங்குவீராக! கேட்ட வரங்களை அளிக்கும் மூர்த்தியே! திருமுருகப்பெருமானே! மயில் வாகனக் கடவுளே! அருவருப்புக்குரிய அசுரனாகிய சூரபன்மனைத் தேவரீரின் வேலாயுதத்தால் பிளந்தவரே!.

22.காளைப் பருவத்துக் குமாரமூர்த்தி என்று தியானித்து தேவரீரின் திருவடிகளைப் பணியும் படியான தவப்பேற்றை அடியேன் அடைந்தது வியப்பானதொன்றே! தென்னம் பாளையைப் போன்ற நீண்ட கூந்தலை உடைய வள்ளியம்மையாரின் திருப்பாதங்களைப் போற்றும் தேவரீர், விண்ணோர்களுக்குத் தலைவராய் மேருமலை ஒத்த பெருமை உடையவராகத் திகழ்கின்றீர்.

23.தேவரீரின் திருவடிகளைத் குறித்துத் தியானிக்காமல் அடியேன் அறிவின்மையால் முழுதும் அழிந்து படலாமோ? இது முறையோ? கூர்மையும் ஆற்றலும் உடைய வேலாயுதத்தை ஏந்தியவாறு உலகை ஆளும் மாமன்னரே, மின்னலையும் கொடியையும் ஒத்த குறவர் குல நங்கையாகிய வள்ளியம்மையாரைச் சேர்ந்த குணக்குன்று போன்றவரே!.

24.கூரிய வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கொங்கையிலே சேரும் விருப்பத்தை உடைய அடியேனின் மனம் தேவரீரின் திருவருள் கிடைக்கவேண்டும் என்று எண்ணும் நற்பேற்றினைப் பெறுமோ? மாமரமாகவும் கிரவுஞ்ச மலையாகவும் உருவெடுத்திருந்த அசுரன் சூரபன்மனை அழிப்பதற்கென்று அவற்றை வேரொடு தொளைத்து அழித்த பெரும் போர் செய்யவல்ல வேலாயுத்தை ஏந்தியவாறு உலகத்தைக் காக்கும் கடவுளே1

25.உண்மை வாழ்வென்று எண்ணி கொடிய வினைக்கு ஈடான இந்த வாழ்வில் களித்து மகிழ்ந்து, ஐயோ, அடியேன் அலைதல் முறையோ? தேவரீரின் திருக்கரங்கள் மட்டுமன்றி, கையில் ஏந்தும் வேலாயுதம், வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகள் ஆகியவை எல்லாம் செந்நிறமாய் அமைந்து, மயில் வாகனத்தின் மீது ஏறிய மாவீரரே!.

26.விண்ணுகத்தின் நாயகமணியே, ஒருதுணையும் இல்லாத அடியேன் தேவரீரின் திருவருளைப் பெறுமாறு சிறிதளவேனும் தேவரீர் எண்ணவில்லையே! வேதங்களாலும் ஆகமங்களாலும் போற்றப்படுபவரே! வேத முதல்வரே! வேதங்களைத் தொகுத்தவரே! ஆகமங்களை வகுத்தவரே! ஞான விநோத மூர்த்தியே! மனத்துக்கு எட்டாதவரே!
.
27.மின்னலைப் போலத் தோன்றி உடனே மறையும் நிலையற்ற வாழ்வை விரும்பியவனாகிய அடியேன் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் அடியேனின் வினைப்பயன் தானோ? பொன்னே! மணியே! செல்வமே! முக்தியாகிய அருட்பேற்றினை அளிப்பவரே! உலகை ஆளும் மாமன்னரே! மயில் வாகனத்தில் ஏறிவரும் முழுமுதற் கடவுளே!.

28.இனிய அமுதமே! கூரிய வேலாயுதத்தை ஏந்திய மாமன்னரே! ஞானத்தின் இருப்பிடமே! 'யான்' என்னும் ஆணவமுடைய அடியேனை தேவரீர் ஆட்கொண்டு அருளி எல்லாம் தானாகி நிலைத்திருக்கும் மேலான நிலையை இத்தன்மையது என்று விளக்கிக் கூற முடியுமோ?.

29.இல்வாழ்க்கை என்னும் மாய வாழ்வில் அடியேனைச் சிக்கவைத்துள்ள தேவரீர் கொடியவனாகிய அடியேனது அறியாமையைப் பொறுத்து மன்னித்தருளவில்லையே! மற்போர் செய்வதற்குரிய பன்னிரண்டு தோள்களிலும் அடியேனின் சொற்களாலாகிய பாடல்களையே மாலைகளாக அணிந்துகொள்ளும் ஒளி வீசும் வேலாயுதரே!.

31.மயிலை வாகனமாகக் கொண்டுள்ள திருமுருகப்பெருமானே! பாழ்படுவதான வாழ்க்கை என்னும் இந்தப் பெரிய மாயைச் சூழலிலே அடியேன் வீழ்க என்று தேவரீர் விதித்துவிட்டீரே! தேவரீர் அடியேனை இங்ஙனம் மாயை வாழ்வில் தள்ளி சிக்கவைத்தற்கு ஏற்கனவே அடியேன் செய்துள்ள தாழ்வான செயல்கள் ஏதேனும் காரணமாக உள்ளனவோ? அது எவ்வாறாயினும் தேவரீர் நீடு வாழ்வீராக!.

32.வெற்றி வேலனே! கலை சார்ந்த நூல்களையே அடியேன் கலக்கத்துடன் விரைந்து உருப்போட்டுக்கற்று தலை வேதனையுறும்படி ஆகிவிடவோ? கொலைத் தொழில் புரியும் வேடர் குலத்தில் தோன்றிய பெண் யானையைப் போன்ற வள்ளியம்மையாரைச் சேர்ந்தவரும் கிரவுஞ்ச மலையை வெற்றி வேலால் பிளந்தவருமான மலைபோன்ற கடவுளே!.

33.கங்கை நதி ஈன்ற வரத மூர்த்தியே! கந்தப்பெருமானே! திருமுருகப்பெருமானே! கருணைக்கு இருப்பிடமானவரே! மனத்துக்கு வருத்தம் தரும் இல்லற வாழ்க்கையுடன் செல்வம் என்னும் விந்திய மலைக்காடு போன்ற சிக்கல் நிறைந்த சூழலை அடியேன் என்று விட்டு விலகுவேன்?.

34.போரில் வல்ல மயில் வாகனத்தையுடையவரே! சண்முக மூர்த்தியே! கங்கை நதியின் பால குமாரனே! கிருபாகர மூர்த்தியே! அழகிய மாதர்கள் நிமித்தம் தீய வழியில் சென்று அடியேன் மனம் குலைந்து போகா வண்ணம் அடியேனுக்கு வரந்தந்து அருள்வாயாக!.

35.பிறை போன்ற ஒளி வீசும் நெற்றியை உடைய வள்ளியம்மையாரைத் தவிர வேறு யாரையும் துதிக்காத விரதம் பூண்டவரே! விண்ணோர்களின் மாமன்னரே! பிரமன் படைத்ததும் வினையாலானதுமான உடலைப் புறக்கணித்துவிட்டு அடியேன் நற்கதியை அடையும் படி செந்தாமரை மலர்களையொக்கும் தேவரீரின் வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகளை அடியேனுக்கு எப்போது அருள்வீர்?.

36.பிரமன் முதலாய விண்ணோர் தங்கள் தலையுச்சிமேல் அணியும் செந்தாமரை மலர்களையொக்கும் திருவடிகளை உடையவரே! வள்ளியம்மையாரின் திருவடிகளைத் தேவரீரின் முடிமீது கொள்பவரே! சிவபெருமான், "நாதரே, குமராய நம" என்று வணங்கி பிரணவ மந்திரத்தின் பொருளைத் தமக்கு உபதேசிப்பீராக என்று கேட்கத் தேவரீர் உபதேசித்தருளிய பொருள்தான் யாதோ?.

37.மனமே! அசுரன் சூரபன்மன் ஒளிந்திருந்த கிரவுஞ்ச மலை மீது செலுத்திய ஆற்றல் மிக்க வேலாயுதத்தை ஏந்திய திருமுருகக் கடவுளைப் போற்றும் அடியார்களின் குழுவைச் சேர்ந்தவன் என்னும் பதவியைப் பெறுவதையே நீ விரும்புவாயாக! "யான்" என்னும் ஆணவத்தை பொறுமையாகிய அறிவைக்கொண்டு அடியோடு வேருடன் அரிந்து தள்ளிவிடுவாயாக!.

38.கூதள மாலை அணியப் பெற்றவரே! வேடர் குலத்தவரான வள்ளியம்மையாரின் தலைவரே! வேதாளக் கூட்டத்தினர் புகழ்கின்ற வேலாயுத மூர்த்தியே! வீண்பேச்சு பேசுபவனாகவும் மிகவும் தீய குணமுடையவனுமாகிய அடியேனை ஒரு பொருளாகக் கருதி தேவரீர் ஆண்டருளிய கருணையானது சொல்லுந்தரமுடையதோ?.

39.உலகை ஆளும் மாமன்னரே! வேடர் குலத்தவரும் மின்னற்கொடி போன்றவருமான வள்ளியம்மையாரின் தோள்களைச் சேரும் கடவுளே! சிவபெருமானுக்குக் குருமூர்த்தியானவரே! பெரிய ஏழுவகையான பிறப்பு நீங்குமாறு மயக்கம் நீங்காத மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை எனப்படும் மூன்று வகை ஆசைகளும் எப்போது தான் முடிவுறுமோ?.

40.சுனைகள், அருவித் துறைகள், பசிய தினைப்புனம் ஆகியவற்றினிடையே வள்ளியம்மையாரைக் காணும் பொருட்டுத் திரிந்தவரே! வினையை வெருட்டி ஓட்டும் ஒளிபொருந்திய தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன்! அத்தகைய அடியேன் இல்லற வாழ்வில் அகப்பட்டுக் கலங்கி அறிவை இழந்து மயக்கம் அடையலாகுமோ?.

41.வெற்றியைத் தரவல்ல வேலாயுதத்தை உடையவரே! திருமுருகப்பெருமானே! மயில் வாகனனே! யோக மூர்த்தியே! சிவபெருமானுக்கு ஞானோபதேசம் செய்த குருமூர்த்தியே! யமன் அடியேனின் உயிரைக் கலக்கிப் பிடிக்க வரும் அந்நாளில் அடியேன் இறவாது தேவரீரின் திருவடிகளை அடியேன் சேருமாறு காப்பாற்றியருள்வீராக!.

42.தியானிக்கப்படும் பொருளை, பசு, பாசம் பற்றிய அறிவைக் கொண்டு தியானிக்காமல், பதிஞானத்தைத் தியானித்து அறிகின்ற வழியைத் தனிச் சிறப்பு மிக்க வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமான் அடியேனுக்கு உபதேசித்தருளியவுடனே உலகத்தாருடன் கொண்டொழுகும் நெருங்கிய உறவுகள், வாக்கு, மனம், அறிவு ஆகியவற்றோடு அறியாமையும் நீங்கி ஒழிந்தனவே!.

43.ஆடை அலங்காரமாக முத்து, மரகதம் ஆகிய மணி வகைகளையும் ஆடையையும் அணியப்பெற்றவரும் வேடர் குலத்தவருமான வள்ளியம்மையாரின் அன்பரே! திருமுருகப்பெருமானே! தேவரீரின் அன்பும் அருளும் அடியேனுக்குக் கிடைத்த நற்பெற்றால், அடியேனின் ஆசை என்னும் விலங்கு பொடியாகிய பின்னர் மவுனம் என்னும் அனுபவ ஞானம் பிறந்ததுவே!.

44.பகைவர்களைத் தொளைத்து அழிக்கும் ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானே! வீடுபேற்றின் நிலையிலும், விண்ணோர்களின் தலை மீதும் நான்கு வேதங்களிலும் கொடிய காட்டிடையேயும் தினைப்புனத்திலும் விளங்கும் வீரக்கழல்கள் அணியப்பெற்றத் தேவரீரின் திருவடிகளை அடியேன் சிரசின்மீது அடைக்கலமாகச் சூட்டிக் கொள்ளுமாறு தேவரீர் தந்தருளிய கருணையை அடியேன் எடுத்துச் சொல்லக்கூடுமோ?.

45.குரு மூர்த்தியே! குமாரப்பெருமானே! குலிசாயுதத்தை உடையவனே! பிணி முகம் என்னும் யானையை வாகனமாகக் கொண்டவனே! சிவயோகத்தை அருளும் கருணா மூர்த்தியே! தாம் கற்ற கல்வியறிவை பிறருக்குப் பயன்படுமாறு எடுத்துச் சொல்லாது வைத்துக் கொண்டிருப்பவர்களிடம் சென்று அடியேன் இரந்து கேளாவண்ணம் தேவரீர் உண்மை ஞானப்பொருளை ஈந்து அருள்புரிவீரோ?.

46.கந்தப் பெருமானே! ஒளிவீசும் வேலாயுதத்தை உடையவரே! உமாதேவியின் மைந்தரே! குமார மூர்த்தியே! வேத மூர்த்தியே! தேவரீர் அடியேனின் தாயும், அடியேனுக்கு அருள்புரியும் தந்தையும் ஆவீர்! அடியேனின் மனவருத்தங்கள் யாவற்றையும் நீக்கி அடியேனை ஆண்டருள்வீராக!.

47.சீற்றங்கொண்டு வந்த சூரபன்மனை அழித்து, விண்ணோர் இன்புறுமாறு அவர்களின் பொன்னுலகைக் குளிர்வித்தவரே! 24 ஆன்ம தத்துவம், 7 வித்யா தத்துவம், 5 சிவ தத்துவம் ஆகிய] முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பால் உள்ள நிலையை எய்தும் நற்பேற்றினை அடியேன் பெறும் வாய்ப்பு உண்டோ?.

48.ஜீவபோதம் கடந்த நிலையில் நின்று சிவபோதத்தால் தேவரீரை அறியும் ஞானியரின் ஞானநிலையில் பிரிவு ஒன்றும் இல்லாது நிற்கும் திருமுருகப்பெருமான் அன்றோ தேவரீர்! உலக பந்தமான நெருங்கிய உறவுகள் அற்றுப் போகும் நிலையை எய்துவதால் அறியாமை என்னும் இருள் சிதைவுற்று அழியுமாறு மனக்கலக்கம் என்னும் மயக்கத்தை வென்ற ஞானியர்களோடு பொருந்தும் வேலாயுதக் கடவுளே!.

49.ஒளி வீசும் கதிர்களையுடைய வேலாயுத்தை ஏந்திய வேறுபாடுடைய திருமுருகப்பெருமானே! தேவரீரை நினைத்துத் தியானிப்பவர்களின் துக்கங்களை நீக்கும் கருணை விளங்கும் பேரொளியே! ஒரு சார்பும் இல்லாது தனித்து விளங்கும் பரம்பொருள் இத்தன்மைத்து என்று அறியுமாறு மற்றவருக்கு அடியேன் சொல்ல இயலுமோ?.

50.கங்கை நதிக்கு மைந்தரே! ஞானசுகத்தின் தலைவரே! திதி என்பவளின் புத்திரர்களாகிய அசுரர்களின் பெருமையைக் கெடுத்து அழித்த அதிவீரரே! அறிவு குலைந்து மிகவும் உள்ளம் சோர்வுற்று மயங்கி நற்கதி பெறும் வழியை இழந்து வீணாகக் கெட்டழிதல் அடியேனின் தலை விதியோ?.

51.உருவமுள்ளவராகவும், உருவமில்லாதவராகவும், உள்ள பொருளாகவும், காணவியலாத பொருளாகவும், நறுமணமாகவும், அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும், உயிர் இடம்பெறும் கருவாகவும், உடலாகவும், உயிராகவும் நற்கதியான புகலிடமாகவும் அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும் குகமூர்த்தியே! தேவரீர் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!.


நன்றி: http://karaneeswarartemple.blogspot.in/

Wednesday, March 10, 2021

எளிதாக பிறவா பெருநிலை அடைய வேண்டுமா?

 



மாணிக்கவாசகர் அன்றே கூறிய சத்திய நிகழ்வு ….

வானவூர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே!

46 - திருப்படையெழுச்சி

ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்

மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின்

ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள

வானஊர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே 

தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்

ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்

திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்

அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. ⁠ .

மாதந்தோறும் பௌர்ணமியில் முக்தி எனும் ஆத்மவிடுதலை சித்தர்கள், ரிசிகள் புடைசூழ குருவின் திருவருளால் ஆதிசக்தி தேவி நமை ஈசனுடன் மிக எளிதாக சேர்ப்பித்து மண்ணில் நல் வித்துக்களாய் வாழ அருள்புரிகின்றார்! வாரீர் பாண்டிச்சேரி ஞானாலயத்திற்கு!

மந்திர தீட்சை வழங்கி பிறவாப் பெரு நிலை அடையச் செய்து உள் உணரும் மார்க்கம் போதிக்கும் ஞானாலயத்திற்கு வாரீர்! பதிவு செய்ய அழைப்பீர்  89405 96665 மேலும் தகவலுக்கு https://enlightenedbeings.org முகவரி: ஞானாலயம், 27, ஜீவா தெரு, முத்திரையர் பாளையம், பாண்டிச்சேரி


எமது ஆத்ம் விடுதலை நிகழ்வு பற்றி அறிய https://docs.google.com/document/d/1WDCMTdEOxX4QeNGrjgIX4MHAI1cUEXGyFPbWsN7nJx0/edit