Moving Image

Friday, October 23, 2020

உயிர்களுக்கு முக்தி அளியுங்கள்!

 இன்று திருவோண நட்சத்திரம். இது உயரிய நட்சத்திரம் ஆகும். உயிர்களைக் காக்கும் பெருமாளுக்கு உரியது. 

உடல் இருக்கும் போது எண்ணங்கள் நமை பல்வேறு விதமாக அலைகழிப்பதை  அறிவோம். அலைகழிக்கப்பட்ட எண்ணங்களுடன் உயிர் துறந்தவர்கள் உடலில்லா நிலையில், தவிக்கும் தவிப்பு கொடுமையானது. அவர்கள் அமைதியுற ஒரு எளிய பூஜை முறையை எல்லா மாதமும் 


திருவோண நட்சத்திரத்தன்று செய்ய அகத்தியபெருமானால்  ஜீவநாடியில் அருளப்பட்டது உள்ளது. 

இதனை உளப்பூர்வமாக நம்பிக்கையுடன் செய்ய பல உயிர்கள் அமைதியுற்று திருவோண நட்சத்திர ஒளியுடன் முருகப்பெருமான் எனும் செம்பு ஒளியின் உந்தலால் நீர்த் தன்மையுடைய காப்பவரான மகாவிஷ்ணுவை துளசி எனும் காந்த ஆற்றலால் அடைந்து பச்சைக் கற்பூர வாயுவால் கரைந்து அடைந்து, பின் ஈசனை அடையும்

தயவுசெய்து பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு முக்தி அளியுங்கள். உங்கள் ஆன்மபலமும் கூடும். வாழ்வில் ஏற்றங்கள் ஏற்படும்.

திருவோண பூஜை

பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும்.

 ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும். 

நீர் விடும் பொழுதும் "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும். 

நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார். 

பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள்வாக்கும் நல்கியுள்ளார் அகத்தியம்பெருமான்.

தவறாது உயிர்களுக்கு விடுதலை அளியுங்கள்!

பூஜை முறை siththanarul blog.