Moving Image

Wednesday, January 13, 2016

பாதயாத்திரைக் குழுவினர் பஜனைப் பாடல்கள்

                                                                    ஓம்

                              வேல்வேல்  பழனியாண்டவா!


வேல் வேல் முருகா வேல் முருகா
வெற்றிவேல் முருகா வேல் முருகா

வேல் வேல் முருகா வேல் முருகா
வெற்றிவேல் முருகா வேல் முருகா

ஆயிரம் பூஜைகள் செய்திடுவோம் ஆறுபடைத்தலங்களிலே
அந்த ஆறுபடை நாயகனை நினைத்தால்
             ஆயிரம் காரியம் நடந்துவிடும்
      நம்  ஆயிரம் காரியம் நடந்துவிடும்              ----- வேல்


அச்சங்களை நீக்கிடும் பாலகனாம்
சூரனை வதைத்திட்ட நாயகனாம்
அச்செந்தூர் வேலவனைத்தான் நினைத்தால்
               அச்சங்களெல்லாம் நீங்கிவிடும்
       நம்  அச்சங்களெல்லாம் நீங்கிவிடும்        ------வேல்


கூடிவிடும் அடியார்க்கடியவராம் குமரகுருபர நாயகராம்
அந்தக் குன்றக்குடி ஷண்முகரைத்தான் நினைத்தால்
                குறைகள் எல்லாம் நீங்கிவிடும்
         நம்  குறைகள் எல்லாம் நீங்கிவிடும்      -------வேல்


பாலனாய் குடிகொண்ட திருத்தலமாம்
பழனி ஆலயத் திருத்தலமாம்
அந்தப் பழனியாண்டவரைத்தான் நினைத்தால்
                 பாவங்களெல்லாம் நீங்கிவிடும்
          நம்  பாவங்களெல்லாம் நீங்கிவிடும்      ------வேல்


வெற்றிகள் சூடிய வேலவனாம்
வண்ணமயில் வாகனத்தில் வருபவனாம்
அந்த வேல்முருகனைத்தான் நினைத்தால்
                 வினைகள் எல்லாம் நீங்கிவிடும்
          நம் வினைகள் எல்லாம் நீங்கிவிடும்        ------வேல்


சங்கரன் மைந்தன் கோவிலிலே காவடிகள் கோடி சங்கமாம்
அந்தச் சங்கரன் மைந்தனைத்தான் நினைத்தால்
                  சங்கடமெல்லாம் தீர்ந்துவிடும்
          நம்  சங்கடமெல்லாம் தீர்ந்துவிடும்           -------வேல்


தம்பிரான் படைத்திட்ட திருத்தலமாம்
தீவினை அகற்றும் திருத்தலமாம்
நம் திருத்தங்கல் முருகனைத்தான் நினைத்தால்
                   தீவினையெல்லாம் தீர்ந்துவிடும்
           நம்   தீவினையெல்லாம் தீர்ந்துவிடும்     ------வேல்


No comments:

Post a Comment