Moving Image

Saturday, December 26, 2015

காவடிக்கூடம் இன்று 6/12/2015

                                                              ஓம்


ஆறுமுகத்தம்பிரானின் புனித இல்லம்- காவடிக்கூடம்!
AARUMUGATHTHAMBIRAN'S  KAAVADIKOODAM
       

       அய்யன் ஆறுமுகத்தம்பிரானை தரிசிக்கும் வாய்ப்பு 6/12/2015 அன்று கிடைத்தது. இப்பதிவில் அய்யனின் புனித இல்லமான காவடிக்கூடத்தை தரிசிக்கலாம்.  இப்புனிதக் கூடம் காவடிக்கூடத்  தெருவில் (முன்னர் நடுத்தெரு) உள்ளது.



                


முன்பு தம்பிரான் வசித்த எளிய குடிசை  தற்சமயம்  நாம் வழிபட ஏதுவான தாழ்வாரத்துடன் உள்ளது.

                கருவறை நுழைவாயில் மேல் இக்காவடிக்கூடம் ஆறுமுகத்தம்பிரான் வகையறாக்களால் என்று கல்கூடமாகக் கட்டப்பட்டது என வரைந்துள்ளனர்.

                                     
                         

       1933 ஆம் ஆங்கிரச வருடம் தைமாத  27ம் தேதி பூச நட்சத்திரத்தில்  9-2-1933 அன்று கட்டப்பட்டுள்ளதை மேலே உள்ள படத்தை ZOOM செய்து காணலாம். அன்று வளர்பிறை சதுர்தசி திதி வியாழக்கிழமை  என drinkpanchang.com தெரிவிக்கிறது.


   
                   உள்ளே அய்யன் பழனி முருகப்பெருமானுக்குச் சுமந்து சென்ற  புனித காவடி மற்றும் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானையும் கண்குளிர காணலாம்.

                                    

பாதுகாப்பு கருதி தம்பிரானது திருப்பாதரட்சைகள் கண்ணாடிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த பதிவில் முருகப்பெருமானின் திருவருளினால் தம்பிரான் திருத்தங்கல் குன்றில் கட்டிய கோவிலைக் காணலாம்.


No comments:

Post a Comment